| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2685 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.) 11 | கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11 | கரம், Karam - திடமான விசும்பு, Visumbu - ஆகாசமென்ன எரி, Eri - அக்னியென்ன வளி, Vali - வாயுவென்ன நீர், Neer - ஜலமென்ன நிலம், Nilam - பூமியென்ன (ஆகிய) இவை மிசை, Ivai misai - இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள) வரன், Varan - சிறந்த நவில், Navil - சப்தமென்ன திறல், Thiral - (கொளுத்தும்) சக்தி யென்ன வலி, Vali - (எதையும் தூக்க வல்ல) பலமென்ன அளி, Ali - குளிர்ச்சி யென்ன பொறை, Porai - எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன ஆய் நின்ற, Aay ninra - ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற பரன், Paran - ஸர்வேச்வரனுடைய அடிமேல், Adimel - திருவடி விஷயமாக குருகூர் சடகோபன் சொல், Kurukoor Sadagopan Sol - திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த நிரல் நிறை, Niral nirai - சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட ஆயிரத்து, Ayirathu - ஆயிரம் பாசுரங்களிலே இவை பத்தும், Ivai pathum - இப் பத்துப் பாசுரமும் வீடு, Veedu - மோஷ பிராபகம். |