Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2687 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2687திருவாய்மொழி || எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில். 2
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2
உயிர் மன்னு, uyir mannu - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற
ஆக்கைகள், akkaigal - சரீரங்கள்
மின்னின், minnin - மின்னலைக் காட்டிலும்
நிலையில், nilayil - நிலையுடையன வல்ல;
என்னும் இடத்து, ennum itattu,idathu - என்று சொல்லுமளவில்
நீரே, neere - நீங்களே
இறை, irai - சிறிது
உன்னுமின், unnumin - ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.