| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2687 | திருவாய்மொழி || எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில். 2 | மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2 | உயிர் மன்னு, uyir mannu - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற ஆக்கைகள், akkaigal - சரீரங்கள் மின்னின், minnin - மின்னலைக் காட்டிலும் நிலையில், nilayil - நிலையுடையன வல்ல; என்னும் இடத்து, ennum itattu,idathu - என்று சொல்லுமளவில் நீரே, neere - நீங்களே இறை, irai - சிறிது உன்னுமின், unnumin - ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள். |