| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2688 | திருவாய்மொழி || விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். 3 | நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3 | நீர் நுமது என்ற இவை, neer numathuendra ivai - அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை வேர் முதல் மாய்த்து, veer mudhal maathu - (ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து இறை, irai - ஸ்வாமியை சேர்மின், sermin - அடையுங்கள்; உயிர்க்கும், uyirkkum - ஆத்மாவுக்கு அதன் நேர், adan ner - அதனோடு ஒத்து நிறை இல், nirai il - பூர்த்தி இல்லை |