Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2689 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2689திருவாய்மொழி || விட வேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப் பாட்டிலருளிச் செய்கிறார் 4
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-2-4
அவன் உரு, avan uru - அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,
இல்லதும் அல்லது, illathum allathu - விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையது மன்று
உள்ளதும் அல்லது, ullathum allathu - ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையது மன்று;
எல்லை இல், ellai il - எல்லை யில்லாத
அ நலம், a nalam - அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)
பற்று அற்று புல்கு, patru atru pulku - ஹேய விஷய ஸங்கத்தை விட்டு-(அப்பெருமானை) ஆச்ரயிக்க