| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2691 | திருவாய்மொழி || ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில். 6 | பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6 | ஈசனும், eesanum - எம்பெருமானும் பற்றிலன், patrilan - ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய் முற்றவும், mutravum - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும் நின்றனன், nindranan - இரா நின்றான்: (ஒலோகமே!) பற்றிலை ஆய், patrilai aai - எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய் அவன், avan - அப் பெருமானுடைய முற்றில், mutril - ஸகல கைங்கரியங்களிலும் அடங்கு, adangu - அந்வயிப்பது. |