Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2691 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2691திருவாய்மொழி || ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில். 6
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6
ஈசனும், eesanum - எம்பெருமானும்
பற்றிலன், patrilan - ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய்
முற்றவும், mutravum - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்
நின்றனன், nindranan - இரா நின்றான்: (ஒலோகமே!)
பற்றிலை ஆய், patrilai aai - எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்
அவன், avan - அப் பெருமானுடைய
முற்றில், mutril - ஸகல கைங்கரியங்களிலும்
அடங்கு, adangu - அந்வயிப்பது.