திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2692 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2692திருவாய்மொழி || கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: 7
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7
பதவுரை Show / Hide
அடங்கு எழில், adangu ezhil - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க, sampathu adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு, kandu - பார்த்து
அடங்க, adanga - அதெல்லாம்
ஈசனஃது, eesanadhu,eesanakdhu - எம்பெருமானுடையதான
எழில் என்று, ezil endru - ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே, ulle - அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்கு, adangu - சொருகிப் போவது