| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2692 | திருவாய்மொழி || கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: 7 | அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7 | அடங்கு எழில், adangu ezhil - முற்றிலும் அழகியதான சம்பத்து அடங்க, sampathu adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம் கண்டு, kandu - பார்த்து அடங்க, adanga - அதெல்லாம் ஈசனஃது, eesanadhu,eesanakdhu - எம்பெருமானுடையதான எழில் என்று, ezil endru - ஸம்பத்து என்று துணிந்து உள்ளே, ulle - அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே அடங்கு, adangu - சொருகிப் போவது |