| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2693 | திருவாய்மொழி || என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில். 8 | உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8 | உள்ளம், ullam - நெஞ்சு என்றும் உரை, urai - வாக்கு என்றும் செயல், seyal - உடல் என்றம் உள்ள, ulla - ஏற்கெனவே யுள்ள இம் மூன்றையும், im moondruyum - இந்த மூன்று உறுப்புக்களையும் உள்ளி, ulli - ஆராய்ந்து பார்த்து கெடுத்து, keduthu - அவற்றிற்குள்ள விஷயாந்தரப் பற்றைத் தவிர்த்து இறை உள்ளில், irai ullil - எம்பெருமான் பக்கலிலே ஒடுங்கு, odungu - அந்வயிப்பது. |