| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2694 | திருவாய்மொழி || ஸ்ரீ ஆறாயிரப்படி - இப்படி அவன் பக்கலிலே கரணங்களை ஒடுங்கப் பண்ணவே பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்கள் எல்லாம் போம் – பின்னையும் இவ் வர்த்தமான சரீரம் போந்தனையும் பார்த்திரு அத்தனையே விளம்பம் உள்ளது -என்கிறார் 9 | ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9 | அவன் கண், avan kan - அந்த எம்பெருமான் பக்கலிலே ஒடுங்க, odunga - அந்வயிக்கவே எல்லாம் ஒடுங்கலும், ellam odungalum - (ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம் விடும், vidum - விட்டு நீங்கும்: பின்னும் , pinnum - அதற்குப் பிறகு ஆக்கை விடும் பொழுது, akkai vidum pozhuthu - சரீரம் தொலையும் நாளை எண், en - எதிர்பார்த்திருப்பது. |