Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2695 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2695திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் 10
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10
எண் பெருக்கு, en perukku - எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த
அ நலத்து, a nalathu - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய
ஒண் பொருள், on porul - சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு இல, iru il - முடிவில்லாத
வண் புகழ், van pukaḻ,pughal - திருக் கல்யாண குணங்களையும் உடையனான
நாரணன், naranaṉ - நாராயணனுடைய
திண் கழல், tin kaḻal - (அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை
சேர், cer, ser - ஆச்ரயிப்பது.