Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2698 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2698திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்) 2
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
நிலை வரம்பு இல பல பிறப்பு ஆய், Nilai varambu ila pala pirappu aay - ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பை யுடையனாய்
முதல் இல கேடு இல முழு நலம், Mudhal ila kedu ila muzhu nalam - முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம்
ஒளி வரும், Oli varum - ஒளி மல்கும்படியான
எளி வரும் இயல்பினன், Eli varum iyalbinan - ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்
வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும், Veedu aam theli tharu nilaimai adhu muzhu vadhum - மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்
ஒழிவு இலன், Ozivu ilan - எப்போதும் உடையவனான
இறையோன், Iraiyon - ஸ்வாமியானவன்
அளிவரும் அருளினோடு அமைந்து, Alivarum arulinodu amainthu - அளித்த கிருபையோடே கூடி
அகத்தனன், Agaththanan - (அடியவர்க்கு) அந்தரங்கனாய்
புறந்தனன், Puranthanan - (மற்றையோர்க்கு) அணுகத் தகாதவனாயிருப்பன்.