திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2699 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2699திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்) 3
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம் அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம் அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
பதவுரை Show / Hide
அமைவு உடை, Amaivu udai - நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான
அறம் நெறி முழுவதும், Aram neri muzhu vadhum - தரும மார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து, Uyarvu ara uyarnthu - இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி
அற, Ara - மிகவும்
நிலம் அது ஆம், Nilam adhu aam - கை வந்திருக்கப் பெறுவதாகிற
அமைவு உடை, Amaivu udai - சதிரை யுடையரான
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
யாவையும், Yaavaiyum - எல்லா அசேதனங்களும்
அமைவு உடை, Amaivu udai - (ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய
கெடல், Kedal - முதல் ஸ்ருஷ்டியென்ன
ஸம்ஹாரமென்ன

யாவரும், Yaavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆம், Thaan aam - தானே யாம்படியான
அமைவு உடை, Amaivu udai - பொருத்தம் பொருந்திய
நாரணன், Naaranan - நாராயணனுடைய
மாயையை, Maayaiyai - அவதார ரஹஸ்யத்தை
யாரே அறிபவர், Yaare arivabar - ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)