| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2700 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.) 4 | யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான் பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4- | பேரும், Perum - (விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும் பிற, Piru - (அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும் பல ஆயிரம் உடைய, Pala aayiram udaiya - அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தோற்றி எம்பெருமான், Emperumaan - எமக்கு நாதனானவனாய், யாரும், Yaarum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான், Oru nilai maiyan ena arivu ariya emperumaan - ஒரு படியை யுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய். யாரும், Yaarum - (அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும். ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான், Oru nilai maiyan en arivu eliya emperumaan - ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு ஓர் பேரும், Oru perum - ஒரு பேரும் ஓர் உருவமும், Oru uruvamum - ஒரு ரூபமும் உளது இல்லை, Uladhu illai - உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூலர்க்கும்) இலது இல்லை, Iladhu illai - இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்) பிணக்கே, Pinakke - நித்ய விவாதமாயேயிருக்கும். |