| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2703 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆராய வேண்டிய படியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.) 7 | ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7- | ஒன்று என, Ondru ena - ஒன்றென்றும் பல என, Pala ena - பலதென்றும் (அதாவது ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்) அறிவு அரு, Arivu aru - அறிதற்கு அரிதான வடிவினுள், Vadivinul - உருவுக்குள்ளே நின்ற, Nindra - நிலைத்திருக்கிற நன்று, Nandru - விலக்ஷணமான எழில், Ezlil - கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன் நான்முகன், Naanmugan - பிரமன் அரன், Aran - ருத்ரன் என்னும் இவரை, Ennum ivarai - என்கிற இத் தெய்வங்களை ஒன்ற, Ondru - மத்யஸ்த த்ருஷ்டியாக நும் மனத்து வைத்து, Num manathu vaithu - உங்களது நெஞ்சில் வைத்து உள்ளி, Ulli - (அவர்களை ஸ்வரூப ஸ்வ பாவங்களை ப்ராமணங் கொண்டு) ஆராய்ந்து நும், Num - உங்களுக்குண்டான இரு பசை அறுத்து, Iru pasai aruthu - இருவர் திறத்திலும் ஈச்வர புத்தியை யொழித்து அவனிடை, Avanidai - அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே நம்முடை, Nammudai - நம்முடைய நாள், Naal - வாழ் நாளில் நன்று என, Nandru en - நன்றாக நலம் செய்வது, Nalam seyvadhu - பக்தி பண்ணுதற்கு உரியது. |