Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2707 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2707திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர், Amarar - தேவர்கள்
தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய
அமரர், Amarar - பொருந்தின
பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள
குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த
சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான
அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த
ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை
கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து
இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும்
வல்லார், Vallar - கற்க வல்லவர்கள்
அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு
உயர்வில், Uyarvil - பரமபதத்தில்
சென்று, sendru - சேர்ந்து
தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற
அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும்
அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள்.