Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2708 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2708திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி “பிரிந்தாரிரங்குவது நெய்தல் நிலத்திலே” என்ற தமிழர்களது கொள்கையின்படி இப்போது நெய்தல் நிலத்திலே யிருக்கின்றாளென்று கொள்ள வேணும் 1
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1
am siraiya,அம் சிறைய - அழகிய சிறகுகளை யுடைய
madam,மடம் - இளமை தங்கிய (அல்லது, விதேயமான)
naray,நாராய் - நாரைப் பறவையே!
aliyathai,அளியத்தாய் - தயை பண்ணுதற்கு உரியாய்!
niyum,நீயும் - நீயும்
nin,நின் - உன்னுடைய
am siraiya sevalum aai,அம் சிறைய சேவலும் ஆய் - அழகிய சிறகுகளை யுடைய ஆணுமாய் (இருவருங்கூடி)
avan,அவன் - அந்த எம்பெருமான்
van siraiyil vaikkil,வன் சிறையில் வைக்கில் - கடினமான சிறையிலே வைத்திட்டால்
aa endru enakku aruli,ஆஆ என்று எனக்கு அருளி - ஐயோவென்று என் விஷயத்தில் கருணை கூர்ந்து
vemsirai pul uyarntharku,வெம்சிறை புள் உயர்ந்தார்க்கு - விரோதி பயங்கரமான சிறகுகளை யுடைய பெரிய திருவடியைக் கொடியாக வெடுத்த பெருமானுக்கு
en vidu thootu aai,என் விடு தூது ஆய் - என்னால் விடப்பட்ட தூதாய்
sendrakal,சென்றக்கால் - போனால்,
vaippundal,வைப்புண்டால் - அதை நீ அநுபவித்திருப்பாயானால்
en seyyum,என் செய்யும் - என்ன கெடுதலுண்டாகும்?