Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2711 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2711திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என்னீர்மைகண்டிரங்கி) பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறித அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! எனது நிலைமையைப் பலகாலும் கண்டுவைத்தும் இரங்காதே போனவர்க்கு நான் என்ன ஸமாசாரம் சொல்லியனுப்புவது?’ என்று நசையற்றவளாய், பின்னையும் வெறுமனிருக்கமாட்டாமையினாலே, ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? மாட்டீர்களோ? என்கிறாள். 4
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4
en neermai kandu,என் நீர்மை கண்டு - எனது ஸ்வபாவத்தை (நேரில்) பார்த்திருந்தும்
irangi,இரங்கி - (பிரிவு காலத்தில்) மனமிரங்கி
idhu thagadhu ennaadha,இது தகாது என்னாத - இப்படி நாம் பிரிந்திருப்பது தகுதியன்று என்றிராத
en neela mugil vannarkku,என் நீல முகில் வண்ணர்க்கு - நீல மேகத்தின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
en sollai,என் சொல்லி - என்ன வார்த்தையைச்
yaan sollu kaeno,யான் சொல்லு கேனோ - சொல்லி நான் சொல்லப்போகிறேன்!;
ini,இனி - இனிமேல்
avargal,அவர்கள் - (பராங்குச நாயகியாகிய) அவளிடத்தில்
nal neermai,நல் நீர்மை - நல்லுயிர்
thangaadhu,தங்காது - தங்கி யிருக்க மாட்டாது
endru oru vaay soll,என்று ஒரு வாய்ச் சொல் - என்றொரு வாய்ச் சொல்லை
nal neelam maganril kaal,நல் நீலம் மகன்றில் காள் - நல்ல நீலநிறமான மகன்றிற் பறவைகளே!
nalguthiroo nalgheero,நல்குதிரோ நல்கீரோ - (எம்பெருமானிடத்துச் சென்று) சொல்லுவீர்களோ மாட்டீர்களோ