Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2715 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2715திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) தன்னுடைய நிலைமையைப் பூவென்னும் ஒரு பக்ஷிக்குக் காட்டி ‘ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்டிருக்கும் எனக்காகத் தூது செல்லாதே உபேஷித்திருப்பாய்; நானோ இப்போது முடியப் புகா நின்றேன்; இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய் என்று சரம ஸமயத்தில் வார்த்தைபோல சொல்லுகின்றாள் 8
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8
Siru poovaai,சிறு பூவாய் - சிறிய பூவையே!
Nee alaiye,நீ அலையே - நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?)
Nedumaalaarkku,நெடுமாலார்க்கு - ‘புருஷோத்தமனுக்கு
En thoodu aay,என் தூது ஆய் - என் தூதாகிச் சென்று
Enathu noi,எனது நோய் - எனது பிரிவாற்றாமையை
Nuval enna,நுவல் என்ன - ‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும்
Nuvalaadhe,நுவலாதே - (போய்ச்) சொல்லாதே
Irundhozhindhaay,இருந்தொழிந்தாய் - வாளா இருந்திட்டாய்,
Naan,நான் - யான்
Saayalodu,சாயலொடு - ஒளியோடு கூடின
Mani maamai,மணி மாமை - அழகாகிய நிறத்தை
Thalarndhaen,தளர்ந்தேன் - இழந்தேன்;
Ini,இனி - இப்படியான பின்பு
Unadhu,உனது - உன்னுடைய
Vaai alagil,வாய் அலகில் - வாயலகுக்குள்ளே
In,இன் - மதுரமான
Adisil,அடிசில் - இரையை
Vaipparai,வைப்பாரை - ஊட்ட வல்லவர்களை
Naadaay,நாடாய் - தேடிக் கொள்