திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2717 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2717திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கரிய ப்ரஸ்தாவம் வந்ததனால், தாய் முலையை நினைத்த கன்று போலே திருவுள்ளமானது பதறி உடலை விட்டுப் புறப்படத் தொடங்கிற்று; அதனை நோக்கி நெஞ்சே! நம் காரியம் ஒரு விதமாக சபலமாகுமளவும் நீ என்னை விடாதே யிருக்கவேணு’ மென்று கேட்டுக் கொள்ளுகிறாள். அன்றியே, தூதுவிடுகிற பிரகரணமாதலால் நெஞ்சைத் தூதுவிடுகிறாள் என்பாரு முளர். அப்போது, விடல் என்றது- அவனை விடவேண்டா என்றபடி 10
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய் கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10
பதவுரை Show / Hide
Aazhi mada nenje,ஆழி மட நெஞ்சே - ஆழ்ந்த மடநெஞ்சே!
Udal,உடல் - சரீர ஸம்பந்தம் பெற்று
Aazhi,ஆழி - சக்ராகாரமாக
Pirappu,பிறப்பு - மாறி மாறிப் பிறக்கிற ஸம்ஸாரி நிலமும்
Veetu,வீடு - மோக்ஷமும்
Uyir,உயிர் - (இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும்
Mudhal aam mutrum aay,முதல் ஆம் முற்றும் ஆய் - ஆகிய இவை முதலான ஸகல பதார்த்தங்களும்
தானிட்ட வழக்காம்படி ஸர்வ நிர்வாஹகனாய்
ஆழ்ந்த நீரை யுடைய ஸமுத்திரத்திலே

Thootri,தோற்றி - ஆவிர்ப்பவித்து
Adhan ullam,அதன் உள்ளே - அக் கடலினுள்ளே
Kan valarum,கண் வளரும் - சயனித் தருள்கின்ற
Adal vizhi ammaanai,அடல் வழி அம்மானை - தீக்ஷ்ணமான சக்கரப் படையை யுடைய பெருமானை
Kantakkaal,கண்டக்கால் - கண்டால்
Idhu,இது - இந்த நிலைமையை
Solli,சொல்லி - அவனுக்குச் சொல்லி
Vinaiyom,வினையோம் - பாபிகளாக நாம்
Ondru aam alavu,ஒன்று ஆம் அளவு - அவனோடு ஒன்றுபடும் வரையில்
Vidal,விடல் - விடாதே.