திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2718 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2718திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார். 11
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின் வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11
பதவுரை Show / Hide
Alavu iyanra,அளவு இயன்ற - எல்லையைக் கடந்த
Ezh ulagathavar perumaan,ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான
Kannanai,கண்ணனை - எம்பெருமானைக் குறித்து,
Valam vayal soo,வளம் வயல் சூழ் - வளர்ப்ப முள்ள கழனிகள் சூழ்ந்த
Van kurukoor,வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய
Sadagopan,சடகோபன் - ஆழ்வார்
Vainthu uraitha,வாய்ந்து உரைத்த - அன்பு பூண்டு அருளிச் செய்த
Alavu iyanra,அளவு இயன்ற - கட்டளைப் பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான)
Andhaathi,அந்தாதி - அந்தாதித் தொடையான
Aayiraththul,ஆயிரத்துள் - ஆயிரத்துக்குள்ளே
Ippaththin,இப் பத்தின் - இப் பதிகத்தினுடைய
Valam uraiyaal,வளம்உரையால் - வளமாகிய சொல்லளவினாலே
Vaan oongu peruvalam,வான் ஓங்கு பெருவளம் - பரம பதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து
Peral aagum,பெறல் ஆகும் - அடையலாகும்