| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2719 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார்) 1 | வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1 | வளம்,Valam - வளப்பம் பொருந்திய ஏழ் உலகின்,Ezh ulagin - ஏழுலகத்திற்கும் முதல் ஆய்,Mudhal aay - முதலாகிய வானோர் இறையை,Vaanoor iraiyai - நித்ய ஸூரி நாதனான எம்பெருமானை அரு வினையேன்,Aru vinaiyen - போக வொண்ணாத பாபத்தை யுடையோனாகிய நான் நினைத்து,Ninaithu - மனத்தினால் தியானித்து நைந்து,Nainthu - உடம்பும் கட்டுக் குலைந்து களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்,Kalavu ezh vennay thodu unda kalvaa enpan - களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லி யழைக்கின்றேன்; பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலும் தளவு ஏழ் முறுவல்,Thalavu ezh muruval - முல்லை யரும்பு போலத் தோன்றுகிற புன்னகையை யுடைய பின்னைக்கு ஆய்,Pinnai kku aay - நப்பின்னைப் பிராட்டிக்காக வல் ஆனாயர் தலைவன் ஆய்,Val aanayar thalaivan aay - சிறந்த இடையர் தலைவனாய் வந்து இள,Ila - இளமை தங்கிய ஏறு ஏழும்,Eru ezhum - எருதுகளேழையும் தழுவிய,Thazhuvia - அணைத்து முடித்த எந்தாய்,Endhaay enpan - என் ஸ்வாமியே! என்பன்,enban - என்றும் சொல்லுவேன் |