Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2719 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2719திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார்) 1
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1
வளம்,Valam - வளப்பம் பொருந்திய
ஏழ் உலகின்,Ezh ulagin - ஏழுலகத்திற்கும்
முதல் ஆய்,Mudhal aay - முதலாகிய
வானோர் இறையை,Vaanoor iraiyai - நித்ய ஸூரி நாதனான எம்பெருமானை
அரு வினையேன்,Aru vinaiyen - போக வொண்ணாத பாபத்தை யுடையோனாகிய நான்
நினைத்து,Ninaithu - மனத்தினால் தியானித்து
நைந்து,Nainthu - உடம்பும் கட்டுக் குலைந்து
களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்,Kalavu ezh vennay thodu unda kalvaa enpan - களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லி யழைக்கின்றேன்;
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலும்
தளவு ஏழ் முறுவல்,Thalavu ezh muruval - முல்லை யரும்பு போலத் தோன்றுகிற புன்னகையை யுடைய
பின்னைக்கு ஆய்,Pinnai kku aay - நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஆனாயர் தலைவன் ஆய்,Val aanayar thalaivan aay - சிறந்த இடையர் தலைவனாய் வந்து
இள,Ila - இளமை தங்கிய
ஏறு ஏழும்,Eru ezhum - எருதுகளேழையும்
தழுவிய,Thazhuvia - அணைத்து முடித்த
எந்தாய்,Endhaay enpan - என் ஸ்வாமியே!
என்பன்,enban - என்றும் சொல்லுவேன்