| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2720 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார்) 2 | நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2 | மாயோனே!,Maayone! - ஆச்சரியனான எம்பெருமானே! இமையோர்,Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்களும் முனிவரும்,Munivarum - (ஸநகன் முதலிய) ரிஷிகளுமான பலரும்,Palrum - பல பேர்களும் நினைந்து,Ninaindhu - (உனது குணங்களைச்) சிந்தித்து நைந்து,Naindhu - (அதனாலலே) சரீரமும் கட்டுக் குலைந்து உள் கரைந்து,Ul karaindhu - மனம் கரைந்து உருகி,Urugi - நெகிழ்ந்து புனைந்த,Punaindha - தொடுக்கப் பட்ட மாலைகளையும் நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்தையும் சாந்தம்,Saantham - சாத்துப் படியையும் புகையோடு,Pugaiyodu - தூபத்தையும் ஏந்தி,Aendhi - கையிலேந்திக்கொண்டு வந்து வணங்கினால்,Vananginaal - தொழுதால், நினைத்த எல்லாம் பெருள்கட்கும்,Ninaitha ellaam perul katkum - நினைக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் வித்து ஆய்,Vitthu aay - மூலமாகி முதலில் சிதையாமே,Mudhalil sidhaiyame - ஸ்வரூப விகாரம் பிறவாதபடி மனம் செய் ஞானத்து,Manam sei jnanathu - மனத்தினால் செய்யப்பட்ட ஸங்கல்ப ரூபமான ஞனாத்தை யுடைய உன்,Un - உன்னுடைய பெருமை,Perumai - பெருமையானது மாசு உணாதோ,Maasu unaadho - அழுக்கடையாதோ? |