Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2720 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2720திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார்) 2
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2
மாயோனே!,Maayone! - ஆச்சரியனான எம்பெருமானே!
இமையோர்,Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்களும்
முனிவரும்,Munivarum - (ஸநகன் முதலிய) ரிஷிகளுமான
பலரும்,Palrum - பல பேர்களும்
நினைந்து,Ninaindhu - (உனது குணங்களைச்) சிந்தித்து
நைந்து,Naindhu - (அதனாலலே) சரீரமும் கட்டுக் குலைந்து
உள் கரைந்து,Ul karaindhu - மனம் கரைந்து
உருகி,Urugi - நெகிழ்ந்து
புனைந்த,Punaindha - தொடுக்கப் பட்ட மாலைகளையும்
நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்தையும்
சாந்தம்,Saantham - சாத்துப் படியையும்
புகையோடு,Pugaiyodu - தூபத்தையும்
ஏந்தி,Aendhi - கையிலேந்திக்கொண்டு வந்து
வணங்கினால்,Vananginaal - தொழுதால்,
நினைத்த எல்லாம் பெருள்கட்கும்,Ninaitha ellaam perul katkum - நினைக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும்
வித்து ஆய்,Vitthu aay - மூலமாகி
முதலில் சிதையாமே,Mudhalil sidhaiyame - ஸ்வரூப விகாரம் பிறவாதபடி
மனம் செய் ஞானத்து,Manam sei jnanathu - மனத்தினால் செய்யப்பட்ட ஸங்கல்ப ரூபமான ஞனாத்தை யுடைய
உன்,Un - உன்னுடைய
பெருமை,Perumai - பெருமையானது
மாசு உணாதோ,Maasu unaadho - அழுக்கடையாதோ?