Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2722 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2722திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (ஆழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகல நினைத்தது கீழ்ப்பாட்டில் சிறிது தணியத் தொடங்கிற்று; அதைக்கண்ட சிலர் ‘ஆழ்வீர் இனி நீர் என் செய்வதாக நினைக்கிறீர்; அணுகப் பார்க்கிறீரோ?’ அகலப் பார்க்கிறீரோ?” என்று கேட்க நான் அகல நினைத்தாலும் ஸ்வாமியான அவன் விடுவதாக இல்லையே; அவன் ஒன்றாலொன்று குறைவில்லாதவனாயிருந்து வைத்தும் ஸ்ருஷ்டி முதலான க்ருஷிகளைப் பண்ணி ஒரு பொருளாகக் கொண்ட பின் நான் அகல்வேனென்றாலும் தன் ஸௌசீல்ய குணத்தினால் என்னை விடமாட்டாதவனாயிரா நின்றானேயென்கிறார்) 4
தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4
தான்,Thaan - பிரம ருத்ராதிகளொருவருமின்றி ஒருவனேயாகி நின்ற தான்
ஓர் உருவே,Or uruve - ஓருருவமுடையனாய்க் கொண்டே
தன்னில்,Thannil - இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்திலே
மூவர் முதலாய வானோர்,Moovar mudhalaaya vaanor - பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர் முதலான தேவர்களும்
முனிவரும்,Munivarum - ரிஷிகளும்
பலரும்,Palrum - பல சேதனர்களும்
மற்றும்,Matrum - மற்ற மானிட சாதியும்
மற்றும்,Matrum - மற்ற மிருகம் பறவை முதலான
முற்றும் ஆய்,Mutrum aay - எல்லாமுமாகி
தான்,Thaan - இப்படி ஸங்கல்பத்தோடு கூடி யிருக்கிற தான்
தனி,Thani - நிமித்த காரணம் வேறு அல்லாமையால் தனியனான
வித்து ஆய்,Vitthu aay - உபாதான காரணமாய்க் கொண்டு
தன்னுள்ளே,Thannullee - தனக்குள்ளே
ஓர்,Or - ஒப்பற்ற
பெரு நீ,Peru nee - மஹத்தான அர்ணவத்தை
தோற்றி,Thootri - தோன்றுவித்து
அதனுள்,Adhanul - அதிலே
கண் வளரும்,Kan valarum - நித்திரை செய்கிற
வைகுந்தன்,Vaikundhan - பரமபத நாதன்
வானோர் பெருமான்,Vaanor perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன்
மா மாயன்,Maa Maayan - மிகவும் ஆச்சரிய குண சேஷ்டிதங்களை வுடையவன்
எம் பெருமான்,Em perumaan - எனக்கு ஸ்வாமி.