| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2722 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (ஆழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகல நினைத்தது கீழ்ப்பாட்டில் சிறிது தணியத் தொடங்கிற்று; அதைக்கண்ட சிலர் ‘ஆழ்வீர் இனி நீர் என் செய்வதாக நினைக்கிறீர்; அணுகப் பார்க்கிறீரோ?’ அகலப் பார்க்கிறீரோ?” என்று கேட்க நான் அகல நினைத்தாலும் ஸ்வாமியான அவன் விடுவதாக இல்லையே; அவன் ஒன்றாலொன்று குறைவில்லாதவனாயிருந்து வைத்தும் ஸ்ருஷ்டி முதலான க்ருஷிகளைப் பண்ணி ஒரு பொருளாகக் கொண்ட பின் நான் அகல்வேனென்றாலும் தன் ஸௌசீல்ய குணத்தினால் என்னை விடமாட்டாதவனாயிரா நின்றானேயென்கிறார்) 4 | தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4 | தான்,Thaan - பிரம ருத்ராதிகளொருவருமின்றி ஒருவனேயாகி நின்ற தான் ஓர் உருவே,Or uruve - ஓருருவமுடையனாய்க் கொண்டே தன்னில்,Thannil - இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்திலே மூவர் முதலாய வானோர்,Moovar mudhalaaya vaanor - பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர் முதலான தேவர்களும் முனிவரும்,Munivarum - ரிஷிகளும் பலரும்,Palrum - பல சேதனர்களும் மற்றும்,Matrum - மற்ற மானிட சாதியும் மற்றும்,Matrum - மற்ற மிருகம் பறவை முதலான முற்றும் ஆய்,Mutrum aay - எல்லாமுமாகி தான்,Thaan - இப்படி ஸங்கல்பத்தோடு கூடி யிருக்கிற தான் தனி,Thani - நிமித்த காரணம் வேறு அல்லாமையால் தனியனான வித்து ஆய்,Vitthu aay - உபாதான காரணமாய்க் கொண்டு தன்னுள்ளே,Thannullee - தனக்குள்ளே ஓர்,Or - ஒப்பற்ற பெரு நீ,Peru nee - மஹத்தான அர்ணவத்தை தோற்றி,Thootri - தோன்றுவித்து அதனுள்,Adhanul - அதிலே கண் வளரும்,Kan valarum - நித்திரை செய்கிற வைகுந்தன்,Vaikundhan - பரமபத நாதன் வானோர் பெருமான்,Vaanor perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் மா மாயன்,Maa Maayan - மிகவும் ஆச்சரிய குண சேஷ்டிதங்களை வுடையவன் எம் பெருமான்,Em perumaan - எனக்கு ஸ்வாமி. |