| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2725 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘ இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.) 7 | அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7 | சிறிய ஞானத்தன்,Siriya gnanathan - அற்ப ஞானத்தை யுடையவனாகிய அடியேன்,Adiyen - நான் காண்பான்,Kaanbaan - காணும் பொருட்டு அலற்றுவன்,Alaattruvan - கூவுகின்றேனே! இதனில் மிக்கு,Idhanil mikku - இதனிலும் மேற்பட்டு ஓர் அயர்வு உண்டே,Or aiarvu undae - ஒரு அவிவேகமுண்டோ? |