Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2725 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2725திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘ இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.) 7
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7
சிறிய ஞானத்தன்,Siriya gnanathan - அற்ப ஞானத்தை யுடையவனாகிய
அடியேன்,Adiyen - நான்
காண்பான்,Kaanbaan - காணும் பொருட்டு
அலற்றுவன்,Alaattruvan - கூவுகின்றேனே!
இதனில் மிக்கு,Idhanil mikku - இதனிலும் மேற்பட்டு
ஓர் அயர்வு உண்டே,Or aiarvu undae - ஒரு அவிவேகமுண்டோ?