திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2729 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2729திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.) 11
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11
பதவுரை Show / Hide
மாலே,Maale - பெரியோனே!
மாயம் பெருமானே,Mayam perumane - ஆச்சரிய குண நிதியே!
மா மாயனே,Ma mayane - மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
என்று என்று,Endru endru - என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி
மாலே ஏறி,Maale yēri - பித்தம் பிடித்து
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்,Maal arulaal mannu kurukoor sadagopan - ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
பால் ஏய் தமிழர்,Paal aay thamizhar - (அருளிச் செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமை யுள்ள தமிழில் வல்லவர்களென்ன
இசைகாரர்,Isaikaarar - இசையறிந்து பாடவல்லவர்களென்ன
பத்தர்,Pathtar - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும்
பரவும்,Paravum - கொண்டாடும்படியமைந்த
ஆயிரத்தின் பால்,Aayirathin paal - ஆயிரம் பாட்டினுள்
பட்ட,Patta - தோன்றின
இவை பத்தும்,Ivai pattum - இந்தப் பத்துப்பாட்டையும்
வல்லார்க்கு,Vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பரிவது இல்லை,Parivathu illai - யாதொரு துக்கமும் உண்டாக மாட்டாது.