திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2731 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2731திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லையென்றார் கீழ்ப்பாட்டில்; பொருள் நியதியில்லாததுபோலவே அதிகாரி நியதியுமில்லையென்பது இப்பாசுரம்.) 2
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2
பதவுரை Show / Hide
அம்,Am - அழகிய
மது வார்,Madhu vaar - தேன் ஒழுகுகின்ற
தண்,Than - குளிர்ந்த
துழாயான்,Thuzhaayan - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனும்
முதுவேதம் முதல்வனுக்கு,Mudhuvedham mudhalvanukku - பழமையான வேதங்களால் முழுமுதற் கடவுளாகச் சொல்லப் பட்டவனுமான பெருமானுக்கு
எது பணி,Edu pani - (தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது?
என் பணி ஏது,En pani yedhu - (அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது?
என்னாததுவே,Ennaathadhuve - என்று சிந்தியாமலிருப்பதே
ஆன் செய்யும் ஈடு,Aan seyyum edu - அடிமை செய்தற்கொப்பாகும்.