| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2732 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் விஷயத்தில் அடிமை செய்கைக்கு அதிகாரி நியதியில்லை யென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக் கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்) 3 | ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3 | என் மனன்,en manan - எனது மனமானது ஈடும் எடுப்பும் இல்,eedum eduppum el - குற்றம் பார்த்துத் தள்ளி விடுதலும் குணம் பார்த்துக் கைக் கொள்ளுதலுமில்லாத ஈசன்,esan - ஸர்வேச்வரனுடைய மாடு,maadu - ஸமீபத்தை விடாது,vidadhu - விடுகிறதில்லை என் நா,en naa - எனது நாவானது அவன்,avan - அந்த ஸர்வேச்வரன் விஷயமான பாடல்,paadal - துதிகளை பாடும்,paadum - பாடுகின்றது; என் அங்கம்,en angam - எனது உடம்பு அணங்கு ஆடும்,anangu aadum - தைவாவேசங்கொண்டது போல் ஆடுகின்றது. |