Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2732 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2732திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் விஷயத்தில் அடிமை செய்கைக்கு அதிகாரி நியதியில்லை யென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக் கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்) 3
ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3
என் மனன்,en manan - எனது மனமானது
ஈடும் எடுப்பும் இல்,eedum eduppum el - குற்றம் பார்த்துத் தள்ளி விடுதலும் குணம் பார்த்துக் கைக் கொள்ளுதலுமில்லாத
ஈசன்,esan - ஸர்வேச்வரனுடைய
மாடு,maadu - ஸமீபத்தை
விடாது,vidadhu - விடுகிறதில்லை
என் நா,en naa - எனது நாவானது
அவன்,avan - அந்த ஸர்வேச்வரன் விஷயமான
பாடல்,paadal - துதிகளை
பாடும்,paadum - பாடுகின்றது;
என் அங்கம்,en angam - எனது உடம்பு
அணங்கு ஆடும்,anangu aadum - தைவாவேசங்கொண்டது போல் ஆடுகின்றது.