திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2732 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2732திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் விஷயத்தில் அடிமை செய்கைக்கு அதிகாரி நியதியில்லை யென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக் கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்) 3
ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3
பதவுரை Show / Hide
என் மனன்,en manan - எனது மனமானது
ஈடும் எடுப்பும் இல்,eedum eduppum el - குற்றம் பார்த்துத் தள்ளி விடுதலும் குணம் பார்த்துக் கைக் கொள்ளுதலுமில்லாத
ஈசன்,esan - ஸர்வேச்வரனுடைய
மாடு,maadu - ஸமீபத்தை
விடாது,vidadhu - விடுகிறதில்லை
என் நா,en naa - எனது நாவானது
அவன்,avan - அந்த ஸர்வேச்வரன் விஷயமான
பாடல்,paadal - துதிகளை
பாடும்,paadum - பாடுகின்றது;
என் அங்கம்,en angam - எனது உடம்பு
அணங்கு ஆடும்,anangu aadum - தைவாவேசங்கொண்டது போல் ஆடுகின்றது.