Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2733 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2733திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.) 4
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4
அணங்கு என ஆடும்,Anangu Ena Aadum - தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற
என் அங்கம்,En Angam - எனது சரீரம்
வணங்கி வழிபடும்,Vanangi Vazhipadum - சேவித்து ஆராதிக்கும்படி நின்ற
ஈசன்,Eesan - எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால்
அமரர்,Amarar - நித்திய ஸூரிகள்
பிணங்கி,Pinangi - பரஸ்பர விவாத் செய்து
பிதற்றும்,Pithatrum - பிதற்றும்படி யாயுள்ள
குணம் கெழு,Gunam Kelu - பல திருக்குணங்கள் பொருத்திய
கொள்கையினான்,Kolkaiyinaan - கோட்பாட்டை யுடையவன்.