| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2734 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.நமக்கு ‘அநந்ய போக்யத்வம்‘ என்பதாக ஒரு ஸ்வரூபமுண்டு, அதாவது எம்பெருமானைத் தவிர்த்து மற்ற அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுவதாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் விஷயத்திலே அவன் அமுதமாகவே யிருப்பான் என்கிறது) 5 | கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் – விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே –1-6-5 | கொள்கை,Kolgai - குணம் பார்த்துக் கொள்ளுதலும் கொளாமை,Kolaamai - குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும் இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய் எள்கல்,Elgal - கைவிடுகைக்கு அடியான மனநெகிழ்ச்சியும் இராகம்,Raagam - கைக் கொள்ளுதற்கு அடியான ஆசையும் இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய் விள்கை,Vilgai - வேறு பிரயோஜனங்களைக் கொண்டு விலகிப் போவதையும் விள்ளாமை,Villamai - தன்னையே விரும்பி விடாதிருப்பதையும் விரும்பி,Virumbi - எதிர் பார்த்து உள் கலந்தார்க்கு,Ul Kalantharkku - (விண்டு போகாமல்) தன்னில் கலந்தவர்கட்கு ஓர் அமுது,Or Amuthu - ஒப்பற்ற அமுதமாயிருப்பன் |