| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2735 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில்* விள்கை யிள்ளாமை விரும்பி* என்று சொன்ன சொற்போக்கிலே பிரயோஜநாந்தர பரர்கள் ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால், ஐயோ உள்கலந்தார்க்கு ஓரமுதாயிருந்து மெம்பெருமானை விட்டுப் பிரயோஜநாந்தர பரர்களாய் ஆபாஸமான அமுதத்தைப் பெற்றுக் கொண்டு விலகிப் போவாரும் சிலரே! என்று தேவர்களை நிந்திப்பதிலே நோக்காகச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6 | அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6 | அமரர்கட்கு,Amararkatku - தேவர்கட்கு அமுதம் ஈந்த,Amutham eentha - அமிர்தத்தைக் கொடுத்தவனாய் திமிர் சுடர் ஆழி,Thimir Sudar Aazhi, திருச் சக்கரம்m Thiru Chakkaram - வளர்கின்ற ஒளியை யுடைய திருச் சக்கரத்தை யுடையனாய் நெடு மால்,Nedumaal - எல்லை கடந்த பெருமையை நிமிர் திரை நீள் கடலான,Nimir Thirai Neel Kadalaa - அலை யெறிகின்ற விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளி அமுதிலும்,Amuthilum - (அக்கடலிலுண்டான) அமிர்தத்தைவிட ஆற்ற இனியன்,Aatra Iniyan - மிகவும் போக்யன். |