Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2737 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2737திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (ஸ்ரீராமபிரானுடைய வீரசரிதத்தை யநுஸந்தித்து இதர விஷயப் பற்றுகளைத் தவிரவே, அவன்றானே இடையூறுகளைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்தருள்வனென்கிறார்.) 8
கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8
தொண்டீர்கள்,Thondirkal - தொண்டர்களே!
கழிமின்,Kazhimin - விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்து விடுங்கள்
கழித்து,Kazhithu - அதனை கழித்து விட்டு
அவனை,Avanai - அப் பெருமானை
தொழுமின்,Thozhumin - தொழுங்கள்;
தொழுதால்,Thozhudhaal - தொழுத மாத்திரத்தினால் (அவன்)
வழி நின்றி,Vazhi Nindri - ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற
வல்வினை,Valvinai - வலிய பாவங்களை
மாள்வித்து,Maalvitthu - ஒழித்து
அழிவு இன்றி,Azhivu Indri - சாச்வதமான
ஆக்கம்,Aakkam - முக்கிய ஸம்பத்தை
தரும்,Tharum - தந்தருள்வன்