திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2740 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2740திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11
பதவுரை Show / Hide
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
மாதவன் பால்,Madhavan Paal - லக்ஷ்மீ நாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தி யுக்தராய்)
தீது அவம் இன்றி உரைத்த,Theethu Avam Indri Uraiththa - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லை யென்பதை யெடுத்துரைத்த
ஏதம் இல் ஆயிரத்து,Yetham el Aayirathu - வழுவற்ற இத் திருவாய் மொழியாயிரத்தில்
இ பத்து,E Pattu - இப் பத்துப் பாசுரஙக்ளையும்
ஓத வல்லார்,Otha Vallar - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள்
பிறவார்,Piravaar - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்