| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2740 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11 | மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11 | சடகோபன்,Sadagopan - ஆழ்வார் மாதவன் பால்,Madhavan Paal - லக்ஷ்மீ நாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தி யுக்தராய்) தீது அவம் இன்றி உரைத்த,Theethu Avam Indri Uraiththa - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லை யென்பதை யெடுத்துரைத்த ஏதம் இல் ஆயிரத்து,Yetham el Aayirathu - வழுவற்ற இத் திருவாய் மொழியாயிரத்தில் இ பத்து,E Pattu - இப் பத்துப் பாசுரஙக்ளையும் ஓத வல்லார்,Otha Vallar - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள் பிறவார்,Piravaar - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள் |