| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2741 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமானுடைய போக்யதையை ஆழ்வார் தாம் தமது திருவுள்ளத்தினால் முந்துற அநுபவித்து அதனை வாய்விட்டுப் பாசுரமிட்டுப் பேசுவதற்கு முன்பே இங்ஙனம் பரம போக்யமானவனை ஆச்ரயித்து வைத்து அந்தோ! அற்ப பலனாகிய கைவல்யத்தை அபேக்ஷிப்பதே! என்று கேவலர்களை நிந்தித்து, அவர்களுடைய புன்மையைப் பாராதே அவர்கள் அபேக்ஷித்ததைக் கொடுப்பதே!” என்று எம்பெருமானது நீர்மையைக் கண்டு வியந்து கூறுவது இப்பாட்டு) 1 | பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1 | பிறவி துயர் அற,Piravi Thuyar Ara - ஜனன மரணங்களினால் வருந் துன்பம் மாத்திரம் நீங்குகைக்காக ஞானத்துள் நின்று,Gnanathul Nindru - ஆத்மாவலோகந மாகிற கைவல்யோபா ஸநத்தில் ஊன்றி துறவி சுடர் விளக்கம் தலைப் பெய்வார்,Thuravi Sudar Vilakkam Thalaipeyvaar - ஸலக பாதிகளையும் விட்டவனான ஸ்வயம் ப்ரகாசனான ஆத்மாவினுடைய ஸாக்ஷாத்காரத்தைப் பெற விரும்புகின்ற கைவல்யார்த்திகள். அறவனை,Aravanai - பரம தர்மிஷ்டனாயும் ஆழி படை,Aazhi Padai - திருவாழி யாழ்வானை ஆயுதமாக வுடையனாயும் அந்தணனை,Anthananaai - பரம பரிசுத்தனாயுமிருக்கின்ற எம்பெருமானை மறவியை இன்றி,Maraviyai Indri - (தாம் விரும்பிய பலனில்) மறப்பில்லாமல். மனத்து வைப்பார் ஏ,Manathu Vaippar ye - உபாஸிக்கின்றார்களே! |