Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2742 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2742திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில்) 2
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2
அடியரை,Adiyarai - தன்னடியாரை
வல்வினை,Valvinai - வலிய கருமங்களினுடைய
துப்பு ஆம்,Thuppum Aam - மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற
புலன் ஐந்தும்,Pulan Aindhum - பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு
துஞ்சக் கொடான்,Thunjak Kodaan - நசித்துப் போம்படி விட்டுக் கொடாதவன்
வைப்பு ஆம்,Vaippu Aam - (அவர்களுக்குப் புருஷர்த்தமான) நிதியுமாய்
மருந்து ஆம்,Marundhu Aam - (விரோதி நிரஸந முகத்தால்) மருந்துமாவன்;
அவன்,Avan - அந்த எம்பெருமான்
எப்பால்,Eppaal - எவ்விடத்துமுள்ள
யவர்க்கும்,Yavarkkum - யாவர்க்கும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து,Nalathaal Uyarndhu Uyarndhu - ஆனந்த குணத்தினால் மிகவும் உயர்ந்து
அப்பாலவன்,Appaalavan - வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப் பட்டவனாய்
எங்கள்,Engal - எங்களுக்கு உரியவனான
ஆயர் கொழுந்து,Ayar Kolunthu - ஆயர் தலைவன்