Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2743 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2743திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இரண்டாம் பாட்டில் அநந்யப்ரயோஜநாதிகாரிகள் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும்படியையருளிச்செய்தார்; ‘ ஆக இவ்விரண்டு வகுப்பிலே நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?’ என்று ஆழ்வாரைச் சிலர் கேட்க; நான் அநந்ய ப்ரயோஜநனாய் அவனைப் பற்றினேன்’ என்று நேரே சொல்ல மாட்டாமல் ‘அவனை அநுபவித்துக் கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்து போகப்பெற்றவன் நான்’ என்றாரிதில்) 3
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3
ஆயர் கொழுந்து ஆய்,Ayar Kolunthu Aai - இடையர் தலைவானான கோபால க்ருஷ்ணனாகிய
அவரால்,Avaraal - அவ் விடையர்களாலே
புடை உண்ணும்,Putai Unnum - வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக அடி யுண்கிற
மாயம் பிரானை,Maayam Piraanai - மாயச் செயல் வல்லவனும்
என்,En - எனக்கு விதேயனும்
மாணிக்கம் சோதியை,Maanikkam Sodhiyai - மாணிக்கம் போல் ஒளி பெற்ற வடிவை யுடையவனும்
தூய அமுதை,Thooya Amudhai - பரிசுத்தமான அம்ருதம் போன்றவனுமான பெருமானை
பருகி பருகி,Parugi Parugi - இடையறாமல் அநுபவித்து
என்,En - என்னுடைய
மாயம்,Maayam - பிரகிருதியின் காரியமாய் வருகின்ற
பிறவி,Piravi - பிறவியினாலுண்டானதாகிய
மயர்வு,Mayarvu - அஜ்ஞானத்தை
அறுத்தேன்,Aruthen - போக்கிக் கொண்டேன்.