Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2744 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2744திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் “என் மாயப்பிறவி மயர்வுறுத்தேன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி ‘ஆழ்வீர்! மாயப்பிறவி மயர்வு அறவேணு மென்பதுதானே உமது உத்தேச்யம்; அது நிறைவேறிவிட்டதாக நீரே சொல்லி விட்டீரே; இனி நீர் ஓய்ந்திருக்கமன்றோ’ என்று சிலர் சொல்ல, எம்பெருமானை எங்ஙனம் நாம் விடுவேனென்கிறார்) 4
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4
மயர்வு அற,Mayarvu Ara - அஜ்ஞானம் தொலையும்படி
மன் மனத்தை,Man Manathai - எனது நெஞ்சிலே
தன்னினான் என்னை,Thanninaan Ennai - நித்ய வாஸஞ் செய்பவனாய்
உயர்வினையே தரும்,Uyarvinaiyae Tharum - (எனக்கு) ஞான பக்தி வளர்த்தியையே தந்தருள்கின்றவனாய்
ஒண் சுடர் கற்றையை,On Sudar Katraiyai - அழகிய தேஜோ ராசியாய்
அயர்வு இல் அமரர்கள்,Ayarvu Il Amarargal - மறப்பில்லாத நித்ய ஸூரிகளுக்கு
ஆதிகொழுந்தை,Aadhi Kolunthai - முதல் தலைவனாய்
என் இசைவினை,En Isaivinai - தன்னைக் கிட்டுமாறு எனக்கு இசைவை விளைவித்தவனான எம்பெருமானை
யான்,Yaan - அடியேன்
என் சொல்லி விடுவேனோ,En Solli vidueeno - என்ன குறையைச் சொல்லி விடக் கடவேனோ? விடமாட்டேன்.