Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2745 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2745திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இதுவும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ பூதம். திருவாய்ப்பாடியிலிடைப் பெண்கள் கண்ணபிரானை விட்டுப் பரமபதத்தை விரும்பினால் நானும் எம்பெருமானை விட்டுப் புறம்புபோவே னென்கிறார்) 5
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5
என் விளக்கை,En Vilakkai - எனக்கு எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டுகிற விளக்குப் போன்றவனும்
என் ஆவியை,En Aaviyai - என் உயிரா யிருப்பவனும்
நடுவே வந்து,Naduve Vandhu - திடீரென்று ஒரு நாளிலே
உய்யக் கொள்கின்ற நாதனை,Uyyak Kolkindra Naadhanai - உஜ்ஜிவிப்பிக்னற ஸ்வாமியும்
தொடுவே செய்து,Toduve Seydhu - கபடச் செயல்களையே செய்து
இள ஆய்ச்சியர் கண்ணினுள்,Ila Aaychiyar KanniNul - இளமை தங்கிய இடப் பெண்களின் கண்களிலே
விடவே செய்து,Vidave Seydhu - விடத் தனமே செய்து
விழிக்கும் பிரானை,Vizhikkum Piranai - கண் கலப்புச் செய்கிற பிரபுவுமாகிய எம்பெருமானை
விடுவேனோ,Viduveno - விடவல்லேனோ? (விடமாட்டேன்)