| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2747 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமான் தம்மை ஒருநாளும் விடமாட்டானென்பதை வற்புறுத்தி யருளிச் செய்கிறாரிதில். அவன் தானாகவே வந்து கைக் கொண்டவனாயிருந்து வைத்து எங்ஙனே விட்டு நீங்க வல்லானென்கிறார்.) 7 | யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7 | யான்,Yaan - நான் ஒட்டி,Otti - இசைந்து என்னுள்,Ennul - என்னுள்ளே இருத்துவம் என்றிலன்,Iruthuvam Endrilan - (எம்பெருமானை) இருத்துவதாக நினைத்திலேன்; தான்,Thaan - தானே ஒட்டிவந்து,Otti Vandhu - பிரதிக்ஞை பண்ணி வந்து என் தனி நெஞ்சை,En Thani Nenjai - என்னுடைய ஸ்வதந்திரமான மனத்தை வஞ்சித்து,Vanjithu - நானறியாதபடி வசீகரித்து ஊன் ஒட்டி,Oon Otti - சரீரத்திலே பொருந்தி நின்று,Nindru - புகுந்து நின்று என் உயிரில் கலந்து,En Uyiril Kalanthu - எனது ஆத்மாவில் கூடி இயல்வான்,Iyalvaan - இப்படி நடக்கிற ஸர்வேச்வான் இனி என்னை நெகிழ்க்க,Ini Ennai Nekkilka - இனி என்னை விட்டு நீங்க ஒட்டுமோ,Ottumo - ஸம்மதிப்பனோ? |