Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2749 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2749திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (“என்னுடைய நன்னெஞ்சந் தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்ல வேண்டிய ப்ரஸக்தி தானுமில்லையே; எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமை பெற்றுள்ள விதனைப் பிரிக்கும் வகை தான் உண்டோவென்கிறார்.) 9
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9
அமரர்,Amarar - நித்ய ஸூரிகளுடைய
முழு,Muzhu - ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும்
முதல் ஆகிய,Mudhal Aagiya - ஹேதுவாய்க் கொண்டு
ஈந்த,Eenth - (கடல் கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும்,
ஆயர் கொழுந்தை,Ayar Kolundhai - இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை
என் ஆவி,En Aavi - எனது ஆத்மாவானது
அமர அழும்ப துழவிய,Amara Azhumba Thuzhaviya - மிகவும் நெருக்கமாகக் கலசி
ஆதியை,Aadhiyai - பிதானானவனும்
அமரர்க்கு,Amaranukku - (இந்திராதி) தேவர்களுக்கு
அமுது,Amuthu - (அவர்கள் விரும்பிய) அம்ருதத்தை
அமர,Amara - இனி மேல் ஒருவராலும் பிரிக்க வொண்ணாதபடி
தழுவிற்று,Thazhuvirru - உகந்து கலந்தது;
இனி அகலுமோ,Ini Akalumo - இனி மேல் பிரிய வழியுண்டோ?