Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2750 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2750திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) ( என்னோடு கலந்த எம்பெருமானுடைய திருக் குணங்களை எத்தனை காலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறப்பதில்லை யென்கிறார்) 10
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10
அகலில்,Agalil - (தன் பக்கலில் அற்ப பலன்களைப் பெற்றுக் கொண்டு சிலர்) பிரிந்து போனால் (அவர்கள் விஷயத்தில்)
அகலும்,Agalum - வருத்தத்தோடே பிரிந்திருப்பவனும்
அணுகில்,Anukil - (சிலர் அநந்ய ப்ரயோஜநராய்) விட மாட்டாதே யிருந்தால்
அணுகும்,Anukum - (அவர்களோடு) ஒரு நீரா கலக்குமவனும்
புகலும் அரியன்,Pugalum Ariyan - (பிரதிகூலர்க்கு) அணுகவுமொண்ணாதவனும்
பொருவு அல்லன்,Poruvu Allan - (அநுகூலர்க்குத்) தடையற்றவனும்
எம்மான்,Emmaan - எனக்கு ஸ்வாமி யானவனும்
நிகரிலவன்,Nikarilavan - (ஆக இப்படிகளாலே) ஒப்பில்லாதவனுமான ஸர்வேச்வரனுடைய
புகழ்,Pugazh - திருப்புகழ்களை
பகலும் இரவும்,Pagalum Iravum - எப்போதும்
படிந்து,Padindhu - உட் புகுந்து
குடைந்து,Kudainthu - எங்கும் கலந்து
பாடி,Paadi - பாடி
இளைப்பிலம்,Ilai Pillam - ஓவுதல் உண்டாகிறிலோம்.