| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2750 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) ( என்னோடு கலந்த எம்பெருமானுடைய திருக் குணங்களை எத்தனை காலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறப்பதில்லை யென்கிறார்) 10 | அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான் நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10 | அகலில்,Agalil - (தன் பக்கலில் அற்ப பலன்களைப் பெற்றுக் கொண்டு சிலர்) பிரிந்து போனால் (அவர்கள் விஷயத்தில்) அகலும்,Agalum - வருத்தத்தோடே பிரிந்திருப்பவனும் அணுகில்,Anukil - (சிலர் அநந்ய ப்ரயோஜநராய்) விட மாட்டாதே யிருந்தால் அணுகும்,Anukum - (அவர்களோடு) ஒரு நீரா கலக்குமவனும் புகலும் அரியன்,Pugalum Ariyan - (பிரதிகூலர்க்கு) அணுகவுமொண்ணாதவனும் பொருவு அல்லன்,Poruvu Allan - (அநுகூலர்க்குத்) தடையற்றவனும் எம்மான்,Emmaan - எனக்கு ஸ்வாமி யானவனும் நிகரிலவன்,Nikarilavan - (ஆக இப்படிகளாலே) ஒப்பில்லாதவனுமான ஸர்வேச்வரனுடைய புகழ்,Pugazh - திருப்புகழ்களை பகலும் இரவும்,Pagalum Iravum - எப்போதும் படிந்து,Padindhu - உட் புகுந்து குடைந்து,Kudainthu - எங்கும் கலந்து பாடி,Paadi - பாடி இளைப்பிலம்,Ilai Pillam - ஓவுதல் உண்டாகிறிலோம். |