Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2753 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2753திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமே யல்லாமல் அங்கு நின்றம் இந் நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது. 2
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2
Ammaan Aay - ஸ்வாமியாய் இருந்து
Vem - உக்கிரமான
Maa - குதிரையின் வடிவாக வந்த கேசி யென்னுமசுரனை
Vaai Keenda - வாய் கிழித்தவனும்
Sem Maa - சிவந்து பெரிய திருக்கண்களை யுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன்
Pinnum - பின்னையும்
Em Maanpum Aanaan - எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான்.