Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2754 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2754திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தை கட்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே நித்ய ஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந் தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச் செய்கிறார்) 3
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3
Mannor - மண்ணுலகத்தார்க்கும்
Vinorukku - விண்ணுலகத்தார்க்கும்
Endrum - எப்போதும்
Kan Aavaan - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)
Than Aar - குளிர்ச்சி நிறைந்த
Vengadam - திருவேங்கடமென்கிற பெயரையுடைய
Vinor Verrpan - நித்ய ஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன்.