Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2763 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2763திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஜகத் காரண பூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலை விட்டுப் போக மாட்டாதபடியானா னென்கிறார்) 1
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1
இவையும்,ivaaiyum - ஸமீபத்திலுள்ள பொருள்களும்
உவையும்,uvaiyum - நடுத்தரமாகவுள்ள பொருள்களும்
இவரும்,ivarum - ஸமீபத்திலுள்ள சேதநர்களும்
அவரும்,avarum - தூரத்திலுள்ள சேதநர்களும்
உவரும்,uvarum - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும்
யவையும்,yavaiyum - ஸகல அசேதனங்களும்
யவரும்,yavarum - ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்)
தன்னுள்ளே,thannulle - தனக்குள்ளே
ஆகியும்,aagiyum - ஆகும்படி வைத்தும்
காக்கும்,kaakkum - ரக்ஷித்தும் போருகிறவனும்
அவையும்,avaiyum - தூரத்திலுள்ள பொருள்களும்
அவையுள்,avaiyul - அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும்
தனி முதல் எம்மான்,thani mudhal emmaan - ஒப்பற்ற காரண பூதனும் அஸ்மத் ஸ்வாமியும்
கண்ணபிரான்,Kannabiraan - கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும்
என் அமுதம்,en amudham - எனக்கு அம்ருதம் போல் பரம போக்யனும்
சுவையன்,suvaiyan - ரஸிகனும்
திருவின் மணாளன்,Thiruvin maṇaaḻan - பெரிய பிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்
என்னுடை சூழல்,ennudai suuḻal - என்னுடைய சுற்றுப் பக்கத்தில்
உளான்,ulaan - தங்கி யிரா நின்றான்.