| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2763 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஜகத் காரண பூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலை விட்டுப் போக மாட்டாதபடியானா னென்கிறார்) 1 | இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1 | இவையும்,ivaaiyum - ஸமீபத்திலுள்ள பொருள்களும் உவையும்,uvaiyum - நடுத்தரமாகவுள்ள பொருள்களும் இவரும்,ivarum - ஸமீபத்திலுள்ள சேதநர்களும் அவரும்,avarum - தூரத்திலுள்ள சேதநர்களும் உவரும்,uvarum - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும் யவையும்,yavaiyum - ஸகல அசேதனங்களும் யவரும்,yavarum - ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்) தன்னுள்ளே,thannulle - தனக்குள்ளே ஆகியும்,aagiyum - ஆகும்படி வைத்தும் காக்கும்,kaakkum - ரக்ஷித்தும் போருகிறவனும் அவையும்,avaiyum - தூரத்திலுள்ள பொருள்களும் அவையுள்,avaiyul - அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும் தனி முதல் எம்மான்,thani mudhal emmaan - ஒப்பற்ற காரண பூதனும் அஸ்மத் ஸ்வாமியும் கண்ணபிரான்,Kannabiraan - கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும் என் அமுதம்,en amudham - எனக்கு அம்ருதம் போல் பரம போக்யனும் சுவையன்,suvaiyan - ரஸிகனும் திருவின் மணாளன்,Thiruvin maṇaaḻan - பெரிய பிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள் என்னுடை சூழல்,ennudai suuḻal - என்னுடைய சுற்றுப் பக்கத்தில் உளான்,ulaan - தங்கி யிரா நின்றான். |