| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2764 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கீழ்ப்பாட்டிற் கூறியபடி பரிஸரத்திலே வந்து இருந்த நிலை ஸாத்மித்தவாறே என்னருகே வந்து நின்றானென்கிறார்) 2 | சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான் வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2 | பல பல சூழல் வல்லான்,pala pala suulal vallaan - மிகப் பல அவதாரங்கள் செய்ய வல்லவனும் தொல்லை யம் காலத்து,thollai yam kaalathu - முன்பொரு காலத்திலே கேசவன்,kaesavan - கேசவனென்னும் திருநாமமுடையவனும் வேழம்,velam - (குவலாயபீட மென்னும்) யானையினுடைய மருப்பை,maruppai - கொம்புகளை ஒசித்தான்,ocitthaan,osithan - ஒடித்து அவ் யானையை முடித்தவனும் விண்ணவர்க்கு,vinnavarkku - தேவர்களுக்கு எண்ணல் அரியான்,eṇṇal ariyaan - நினைத்ததற்கும் அருமையானவனும் உலகை,ulagai - பூமியை கேழல் ஒன்று ஆகி,kaelal onru aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாகி,இடந்து குத்தி யெடுத்து வந்தவனும் ஆழம்,aazham - ஆழமாகிய நெடுகடல்,netukadal - நீண்ட ஸமுத்ரத்திலே சேர்ந்தான்,serndhaan - திருக்கண் வளர்ந்தருள்பவனுமான என்னுடை அம்மான் அவன்,ennudai ammaan avan - அவ் வெம்பெருமான் என் அருகலிலான்,en arukalilaan - என்னருகிலுள்ளான். |