திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2764 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2764திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கீழ்ப்பாட்டிற் கூறியபடி பரிஸரத்திலே வந்து இருந்த நிலை ஸாத்மித்தவாறே என்னருகே வந்து நின்றானென்கிறார்) 2
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான் வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2
பதவுரை Show / Hide
பல பல சூழல் வல்லான்,pala pala suulal vallaan - மிகப் பல அவதாரங்கள் செய்ய வல்லவனும்
தொல்லை யம் காலத்து,thollai yam kaalathu - முன்பொரு காலத்திலே
கேசவன்,kaesavan - கேசவனென்னும் திருநாமமுடையவனும்
வேழம்,velam - (குவலாயபீட மென்னும்) யானையினுடைய
மருப்பை,maruppai - கொம்புகளை
ஒசித்தான்,ocitthaan,osithan - ஒடித்து அவ் யானையை முடித்தவனும்
விண்ணவர்க்கு,vinnavarkku - தேவர்களுக்கு
எண்ணல் அரியான்,eṇṇal ariyaan - நினைத்ததற்கும் அருமையானவனும்
உலகை,ulagai - பூமியை
கேழல் ஒன்று ஆகி,kaelal onru aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாகி,இடந்து குத்தி யெடுத்து வந்தவனும்
ஆழம்,aazham - ஆழமாகிய
நெடுகடல்,netukadal - நீண்ட ஸமுத்ரத்திலே
சேர்ந்தான்,serndhaan - திருக்கண் வளர்ந்தருள்பவனுமான
என்னுடை அம்மான் அவன்,ennudai ammaan avan - அவ் வெம்பெருமான்
என் அருகலிலான்,en arukalilaan - என்னருகிலுள்ளான்.