Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2765 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2765திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பெரியதிருவடி திருவன்நதாழ்வான் பிராட்டிமார் முதலானோர் ஓரொரு வகைகளாலே தன்னோடு ஸம்ச்லேஷ ரஸம் பெருமாபோலல்லாமல் எல்லா வகைகளிலுமுள்ள ஸம்ச்லேஷஸங்களையும் நான் பெறும்படி எனக்குத் தந்து என்னை ஒருகாலும் விடாதபடி யானான் எம்பெருமானென்கிறார்.) 3
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3
அருகல் இல் ஆய,arukal il aay - ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத
பெரு சீர்,peru seer - சிறந்த திருக்குணங்களை யுடையவனும்
அமரர்கள்,amararkal - நித்ய ஸூரிகளுக்கு
ஆதி முதல்வன்,aadhi mudhalvan - தலைவனும்
கருகிய நீலம் நல்மேனிவண்ணன்,karugiya neelam nalmeenivanan - கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தை யுடையவனும்
செம் தாமரை கண்ணன்,sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும்
பொரு சிறை புள்,poru sirai pul - செறிந்த சிறகையுடைய பெரிய திருவடியை
உவத்து ஏறும்,uvathu aerum - விரும்பி வாஹனமாகக் கொள்பவனும்
பூமகளார் தனி கேள்வன்,pumagalar thani kelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்
என்னோடுடனே,ennodudane - என்னோடேகூடி நின்று
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்,oru kathiyin suvai thandittu ozhivillan - ஒரு வழியாலுள்ள இனிமையைத் தந்து தவிருகிறானில்லை (ஸகலவித அநுபவங்களையும் தருகின்றானென்றபடி).