| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2765 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பெரியதிருவடி திருவன்நதாழ்வான் பிராட்டிமார் முதலானோர் ஓரொரு வகைகளாலே தன்னோடு ஸம்ச்லேஷ ரஸம் பெருமாபோலல்லாமல் எல்லா வகைகளிலுமுள்ள ஸம்ச்லேஷஸங்களையும் நான் பெறும்படி எனக்குத் தந்து என்னை ஒருகாலும் விடாதபடி யானான் எம்பெருமானென்கிறார்.) 3 | அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3 | அருகல் இல் ஆய,arukal il aay - ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத பெரு சீர்,peru seer - சிறந்த திருக்குணங்களை யுடையவனும் அமரர்கள்,amararkal - நித்ய ஸூரிகளுக்கு ஆதி முதல்வன்,aadhi mudhalvan - தலைவனும் கருகிய நீலம் நல்மேனிவண்ணன்,karugiya neelam nalmeenivanan - கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தை யுடையவனும் செம் தாமரை கண்ணன்,sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும் பொரு சிறை புள்,poru sirai pul - செறிந்த சிறகையுடைய பெரிய திருவடியை உவத்து ஏறும்,uvathu aerum - விரும்பி வாஹனமாகக் கொள்பவனும் பூமகளார் தனி கேள்வன்,pumagalar thani kelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான் என்னோடுடனே,ennodudane - என்னோடேகூடி நின்று ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்,oru kathiyin suvai thandittu ozhivillan - ஒரு வழியாலுள்ள இனிமையைத் தந்து தவிருகிறானில்லை (ஸகலவித அநுபவங்களையும் தருகின்றானென்றபடி). |