| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2766 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஒன்றாலொன்று குறைவில்லாதவனாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே என்னிடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்திராநின்றனென்கிறார்) 4 | உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான் கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4 | உடன் அமர் காதல்,udan amar kaadhal - கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள மகளிர்,magalir - பிராட்டிமார் (யாவரென்னில்) திருமகள்,thirumagal - ஸ்ரீமஹாலக்ஷ்மி மண் மகள்,man magal - பூமிப்பிராட்டி ஆயர் மடமகள்,aayar madamagal - இடைக்குலத்துப் பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டி என்ற இவர் மூவர்,endra ivar muvar - என்று சொல்லப்பட்ட இம் மூவராவர்; ஆளும் உலகமும் மூன்றே,aalum ulagamum moondre - தன்னலாளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாயிருக்கும்; ஆக இங்ஙனம் வாய்த்தவனும்) அவை,avai - அவ்வுலகங்களை உடன்,udan - விடாமலே ஒக்க விழுங்க,okka vizhunga - ஏக காலத்திலே உண்டு ஆல் இலை,aal ilai - ஆலிலையில் சேர்ந்தவன்,cērandhavan - கண் வளர்ந்தவனும் எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியும் கடல் மலி மாயம் பெருமான்,kadal mali maayam perumaan - கடலிற்காட்டிலும் மிகப் பெரிய மாயச் செயல்களால் பெருமை பெற்றவனுமான கண்ணன்,kannan - கண்ணபிரான் என் ஒக்கலையான்,en okkalaiyaan - என் இடுப்பிலே வந்தமர்ந்தான். |