| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2767 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்கும் ஜநகனான எம்பெருமான் என்று நெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 5 | ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5 | ஒக்கலை வைத்து,okkalai vaithu - இடுப்பிலெடுத்துக் கொண்டு முலைப்பால் உண் என்று,mulaippaal un enru - ‘முலைப் பாலை யுண்பாய்’ என்று சொல்லி தந்திட,thandita - முலை கொடுக்க வாங்கி,vaangi - (அம் முலையைக்) கையாற்பிடித்து செக்கம்,chekkam - (அந்தப் பூதனையின்) நினைவு செக,sega - அவளோடே முடியும்படியாக அன்று,andru - அந் நாளில் அவள் பால்,aval paal - அவளது பாலையும் உயிர்,uyir - பிராணனையும் செக,sega - அழிய உண்ட,undu - அமுது செய்த பெருமான்,perumaan - ஸ்வாமியானதும், தக்கபிரானோடு,thakkabiraanoatu - நிகம்பரச் சாமியான ருத்ரனும் அயனும்,ayanum - பிரமனும் இந்திரனும்,indiranum - இந்திரனும் முதலாக,mudhalaga - முதலாக வுள்ள ஒக்கவும்,okkavum - எல்லாரையும் தோற்றிய,toatritiya - படைத்த ஈசன்,eesan - ஈசனானவனும் மாயன்,maayan - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம் பெருமான் என் நெஞ்சில் உளான்,en nenjil ulaan - எனது இதயத்திலுள்ளானானான் |