Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2767 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2767திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்கும் ஜநகனான எம்பெருமான் என்று நெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 5
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5
ஒக்கலை வைத்து,okkalai vaithu - இடுப்பிலெடுத்துக் கொண்டு
முலைப்பால் உண் என்று,mulaippaal un enru - ‘முலைப் பாலை யுண்பாய்’ என்று சொல்லி
தந்திட,thandita - முலை கொடுக்க
வாங்கி,vaangi - (அம் முலையைக்) கையாற்பிடித்து
செக்கம்,chekkam - (அந்தப் பூதனையின்) நினைவு
செக,sega - அவளோடே முடியும்படியாக
அன்று,andru - அந் நாளில்
அவள் பால்,aval paal - அவளது பாலையும்
உயிர்,uyir - பிராணனையும்
செக,sega - அழிய
உண்ட,undu - அமுது செய்த
பெருமான்,perumaan - ஸ்வாமியானதும்,
தக்கபிரானோடு,thakkabiraanoatu - நிகம்பரச் சாமியான ருத்ரனும்
அயனும்,ayanum - பிரமனும்
இந்திரனும்,indiranum - இந்திரனும்
முதலாக,mudhalaga - முதலாக வுள்ள
ஒக்கவும்,okkavum - எல்லாரையும்
தோற்றிய,toatritiya - படைத்த
ஈசன்,eesan - ஈசனானவனும்
மாயன்,maayan - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம் பெருமான்
என் நெஞ்சில் உளான்,en nenjil ulaan - எனது இதயத்திலுள்ளானானான்