Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2769 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2769திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (உலகில் நாயகியோடு கலவி செய்யவரும் நாயகன் அவள் உகக்குமாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு வருமாபோலே எம்பெருமானும் என்னோடு கலக்க விரும்பித் திருத்துழாய்; மாலையாலே மிகவும் அழகு பெறுவித்துக் கொண்டு வந்து எனது நாவிலே கலந்தானென்கிறார் இப்பாட்டில்) 7
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7
தோள் இணை மேலும்,thol inai meelum - இரண்டு திருத் தோள்களிலும்
நல் மார்பின் மேலும்,nal maarbin meelum - விலக்ஷணமான திரு மார்பிலும்
சுடர் முடிமேலும்,sudar mudi meelum - ஒளி பொருந்திய திருமுடியிலும்
தாள் இணைமேலும்,thaal inai meelum - இரண்டு திருவடிகளிலும்
புனைந்த,punaintha - அணியப்பட்ட
தண் அம் துழாயுடை அம்மான்,than am thuzhaayudai ammaan - குளிர்ந்தழகிய திருத் துழாயையுடைய ஸ்வாமியாய்
கேள் இணை ஒன்றும் இலாதான்,kel inai ondrum ilaathaann - பொருத்தமான உபமானமொன்று மில்லாதவனாய்
கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,kilarum sudar oli moorthi - மென்மேலும் கிளர்கின்ற சிவந்த வொளியே வடிவெடுத்தவனான எம்பெருமான்
நாள்,naal - நாடோறும்
அணைந்து,anainthu - கிட்டி
ஒன்றும் அகலான்,ondrum agalaan - சிறிதும் விலகாதவானய்க்கொண்டு
என்னுடைய,ennudaiya - என்னுடைய
நாவின் உளான்,naavin ulaan - நாவிலுள்ளவனாக ஆனான்.