| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2769 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (உலகில் நாயகியோடு கலவி செய்யவரும் நாயகன் அவள் உகக்குமாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு வருமாபோலே எம்பெருமானும் என்னோடு கலக்க விரும்பித் திருத்துழாய்; மாலையாலே மிகவும் அழகு பெறுவித்துக் கொண்டு வந்து எனது நாவிலே கலந்தானென்கிறார் இப்பாட்டில்) 7 | தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான் கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7 | தோள் இணை மேலும்,thol inai meelum - இரண்டு திருத் தோள்களிலும் நல் மார்பின் மேலும்,nal maarbin meelum - விலக்ஷணமான திரு மார்பிலும் சுடர் முடிமேலும்,sudar mudi meelum - ஒளி பொருந்திய திருமுடியிலும் தாள் இணைமேலும்,thaal inai meelum - இரண்டு திருவடிகளிலும் புனைந்த,punaintha - அணியப்பட்ட தண் அம் துழாயுடை அம்மான்,than am thuzhaayudai ammaan - குளிர்ந்தழகிய திருத் துழாயையுடைய ஸ்வாமியாய் கேள் இணை ஒன்றும் இலாதான்,kel inai ondrum ilaathaann - பொருத்தமான உபமானமொன்று மில்லாதவனாய் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,kilarum sudar oli moorthi - மென்மேலும் கிளர்கின்ற சிவந்த வொளியே வடிவெடுத்தவனான எம்பெருமான் நாள்,naal - நாடோறும் அணைந்து,anainthu - கிட்டி ஒன்றும் அகலான்,ondrum agalaan - சிறிதும் விலகாதவானய்க்கொண்டு என்னுடைய,ennudaiya - என்னுடைய நாவின் உளான்,naavin ulaan - நாவிலுள்ளவனாக ஆனான். |