Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2770 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2770திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கலைகளெல்லாவற்றாலும் காணவேண்டியவனான எம்பெருமான் ப்ரமாணங்களாலே காணக்கடவதான தன் வடிவை என் கட்புலனுக்கு இலக்காக்கினானென்கிறார்) 8
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8
நாவினுள் நின்று,naavinul ninru - நாவினிடத்தில் நின்றும்
மலரும்,malrum - பரவுகின்ற
ஞானம் கலைகளுக்கு எல்லாம்,gnanam kalaikaluku ellam - ஜ்ஞான ஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும்
ஆவியும் ஆக்கையும் தானே,aaviyum aakkaiyum thaane - உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும்
அழிப்போடு அளிப்பவன் தானே,azhippoatu alippavan thaane - (அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும்
பூ இயல் நால்,poo iyal naal - பூ மாறாத நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனும்.
பொருபடை ஆழிசங்கு ஏந்தும்,porupadai aazhisangu aendhum - (அத்திருத்தோள்களில்) போர் செய்கின்ற ஆயுதங்களாகிய திருவாழி திருச்சங்குகளைத் தரித்திருப்பவனும்.
காவி நல்மேனி,kaavi nalmeeni - கருநெய்தல் போன்று அழகிய திருமேனியை யுடையவனும்
கமலம் கண்ணன்,kamalam kannan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனுமாகிய எம்பெருமான்
என் கண்ணின் உளான்,en kannin ulaan - (இவ்வழகோடே) எனது கண்ணுக்குள்ளே யானான்.