திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2771 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2771திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்) 9
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9
பதவுரை Show / Hide
கமலம் கண்ணன்,kamalam kannan - புண்டரீகாக்ஷன்
என் கண்ணிணுளளான்,en kannin ulanaan - எனது கண்களுக்கு இலக்கானான்;
காண்பன்,kaanban - (நானும் அவனைக்) காணா நின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப் பெற்றேனென்னில்;)
அவன்,avan - அப்பெருமான்
கண்களாலே,kankalaale - (தனது) திருக்கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்,amalangal aaka vizhikkum - அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப் பெற்றேனெக்க;)
ஐம்புலனும்,aimbulanum - மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும்
அவன் மூர்த்தி,avan moorthi - அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்)
கமலத்து நம்பி அயன் தன்னை,kamalathu nambi ayan thanai - தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும்
கண் நுகலானொடும்,kaṇ nukalaanodum - நெற்றிக் கண்ணனாகிய சிவபிரானையும்
தோற்றி,totri - தோற்றுவித்து (அவர்கள் முதலாக)
அமலம் தெய்வத்தோடு,amalam teivathoodu - ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின
உலகம்,ulagam - உலகங்களையும்;
ஆக்கி,aakki - படைக்குமவன்
என் நெற்றி உளான்,en netri ulan - (ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்) எனது நெற்றியிலே யானான்.