| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2771 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்) 9 | கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9 | கமலம் கண்ணன்,kamalam kannan - புண்டரீகாக்ஷன் என் கண்ணிணுளளான்,en kannin ulanaan - எனது கண்களுக்கு இலக்கானான்; காண்பன்,kaanban - (நானும் அவனைக்) காணா நின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப் பெற்றேனென்னில்;) அவன்,avan - அப்பெருமான் கண்களாலே,kankalaale - (தனது) திருக்கண்களாலே அமலங்கள் ஆக விழிக்கும்,amalangal aaka vizhikkum - அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப் பெற்றேனெக்க;) ஐம்புலனும்,aimbulanum - மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும் அவன் மூர்த்தி,avan moorthi - அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்) கமலத்து நம்பி அயன் தன்னை,kamalathu nambi ayan thanai - தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும் கண் நுகலானொடும்,kaṇ nukalaanodum - நெற்றிக் கண்ணனாகிய சிவபிரானையும் தோற்றி,totri - தோற்றுவித்து (அவர்கள் முதலாக) அமலம் தெய்வத்தோடு,amalam teivathoodu - ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின உலகம்,ulagam - உலகங்களையும்; ஆக்கி,aakki - படைக்குமவன் என் நெற்றி உளான்,en netri ulan - (ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்) எனது நெற்றியிலே யானான். |