| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2773 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (இத் திருவாய் மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்வார் தலையிலே அப்பெருமானது திருவடிகள் நாடோறும் வந்து சேருமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்..) 11 | உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன் இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11 | உச்சி உள்ளே நிற்கும்,ucchi ulle nirgum - (கீழ்ப்பாட்டிற் கூறியபடி) என் தலை மீதிருப்பவனும் தேவதேவற்கு,devadhevarukku - தேவாதி தேவனும் கண்ணபிரார்க்கு,kannabirarkku - கண்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானுக்கு இச்சை உள் செல்ல உணர்த்தி,ischai ul chella unaruthi - (தன் பக்கலிலே அவன் பண்ணின) ஆதரத்தைத் தாம் அறிந்த படியைத் திருவுள்ளத்திலே பட அறிவித்து வண் குருகூர் சடகோபன் சொன்ன இ ஆயிரத்துள்,van kurukoor sadagopan sonna i aayiraththul - சடகோபன் சொன்ன இத்திவ்யப்ரபந்தத்தினுள் இவையும் ஓர் பத்து,ivaaiyum oru paththu - இந்த அத்விதீயமான பத்துப் பாசுரங்களையும் என் பிராற்கு,en pirarkku - எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய,vinnappam seyya - (ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில் நீள் கழல்,neel kuzhal - (உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை நிச்சலும்,niscalum - எப்போதும் சென்னி,chenni - தலையில் பொரும்,porum - வந்து சேரும் |