திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2773 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2773திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (இத் திருவாய் மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்வார் தலையிலே அப்பெருமானது திருவடிகள் நாடோறும் வந்து சேருமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்..) 11
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன் இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11
பதவுரை Show / Hide
உச்சி உள்ளே நிற்கும்,ucchi ulle nirgum - (கீழ்ப்பாட்டிற் கூறியபடி) என் தலை மீதிருப்பவனும்
தேவதேவற்கு,devadhevarukku - தேவாதி தேவனும்
கண்ணபிரார்க்கு,kannabirarkku - கண்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானுக்கு
இச்சை உள் செல்ல உணர்த்தி,ischai ul chella unaruthi - (தன் பக்கலிலே அவன் பண்ணின) ஆதரத்தைத் தாம் அறிந்த படியைத் திருவுள்ளத்திலே பட அறிவித்து
வண் குருகூர் சடகோபன் சொன்ன இ ஆயிரத்துள்,van kurukoor sadagopan sonna i aayiraththul - சடகோபன் சொன்ன இத்திவ்யப்ரபந்தத்தினுள்
இவையும் ஓர் பத்து,ivaaiyum oru paththu - இந்த அத்விதீயமான பத்துப் பாசுரங்களையும்
என் பிராற்கு,en pirarkku - எம்பெருமானுக்கு
விண்ணப்பம் செய்ய,vinnappam seyya - (ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில்
நீள் கழல்,neel kuzhal - (உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை
நிச்சலும்,niscalum - எப்போதும்
சென்னி,chenni - தலையில்
பொரும்,porum - வந்து சேரும்